எம்.எல்.ஏ. விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலிடத்துக்கு கடிதம்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத் திறப்பிற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத் திறப்பிற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சியையும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. ஆனால், காங்கிரஸ் கொறடாவாக இருக்கும் விஜயதரணி எம்.எல்.ஏ. மட்டும் ஜெயலலிதா படத் திறப்புக்கு ஆதரவு தெரிவித்தார். எண்ணற்ற திட்டங்களையும், சாதனைகளையும் செய்துள்ள ஜெயலலிதாவின் படம் திறப்பதில் தவறு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

இது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனியார் டி.வி. விவாதத்தில் கலந்து கொண்ட விஜயதரணி ராகுல்காந்திக்கு சவால் விடும் வகையில் கருத்து தெரிவித்து இருப்பது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு பெண் என்ற முறையில் நான் படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்தேன். பேரவையில் 10 தலைவர்கள் படம் உள்ளது. அதில், ஆண்கள் தான் உள்ளனர். ஒரு பெண் தலைவருக்கு இடம் இல்லையா..? கட்சி முடிவின்படி நான் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

குற்றவாளி என்று அறிவித்த பின்புதான் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை ராகுல்காந்தியும், திருநாவுக்கரசரும் சென்று பார்த்தனர். இறுதிச் சடங்கில் ராகுல்காந்தி கலந்து கொண்டு சடங்கு முடியும் வரை இருந்தார். அப்போதெல்லாம் அவர் குற்றவாளி என்று தெரியவில்லையா? அன்று புறக்கணிக்க வேண்டியதுதானே? மரணத்துக்கு ஏது மரபு. நான் இப்படிச் சொல்வதால் என் மீது காங்கிரஸ் தலைமைக்குப் புகார் அனுப்பட்டும். தனிப்பட்ட முறையில் எனது உரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. அது ராகுல்காந்தியாக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசராக இருந்தாலும் சரி. கருத்து சொல்வது எனது தனிப்பட்ட உரிமை. கட்சி முடிவுப்படி பங்கேற்கக் கூடாது என்றார்கள் நான் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விஜயதரணியின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு விவகாரங்களைக் கவனிக்கும் மேலிட பார்வையாளரான முகுல்வாஸ்னிக் ஆகியோருக்கு திருநாவுக்கரசர் அறிக்கை அனுப்பி உள்ளார். 

விலவங்கோடு தொகுதியில் இருந்து 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான விஜயதரணி ஏற்கனவே இளங்கோவன் தலைவராக இருந்தபோது அவருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க. பிளவுபட்ட போது டி.டி.வி. தினகரனையும் சந்தித்துப் பேசினார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறார். எனவே, அவர் மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...