கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1998-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்பு முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20-ம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என்றும், இறந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நினைவு தூண் அமைக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.