சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூரில் சாலைமறியல்

சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே ராயர்பாளையம் அபிராமி நகரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்ககளாக அப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் சாக்கடைக்கழிவு நீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏறப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அபிராமி நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ராயர்பாளையம் - திருப்பூர் சாலை சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர். விரைவில் சாக்கடை கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...