பாரதியார் பலகலை.,: ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

கோவை: பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 

சரியான தகுதிகள் இருந்தும் தங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிகள் ஒதுக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மீது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே  15 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். 



இந்த நிலையில், கணபதி கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த 15 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

கணபதி-யால் முறைகேடான முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கம் செய்துவிட்டு முழுத்தகுதி உள்ள தங்களுக்கு அந்த பணிகளை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

புகார் செய்திருந்த 15 பேரில்  முதற்கட்டமாக 5 பேரிடம் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எந்த வகையில் கணபதியால் பாதிக்கப்பட்டீர்கள்? என்பது குறித்த போன்ற விசாரணைகள் தங்களிடம்  மேற்கொள்ளப்பட்டதாக அருள்மீனா என்பவர் கூறினார்.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...