மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தினமும் குடி போதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கூறுவதோடு, பள்ளி நேரத்தில் அங்குள்ள நிழற்குடையின் கீழ் போதையில் படுத்து இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணியிடம் புகார் அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி மற்றும் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் கென்னடி குடிபோதையில் இருந்ததோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய கூறுவது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், " பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திலே பள்ளியின் வெளியில் உள்ள நிழற்குடைக்கு வந்து விடுவார். அங்கு சிகிரெட் குடித்து விட்டுப் படுத்து உறங்கி விடுவார். நாங்கள் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை." என்றனர். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த இரண்டு பள்ளிகளில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களின் பெற்றோரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு , மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...