திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தினமும் குடி போதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கூறுவதோடு, பள்ளி நேரத்தில் அங்குள்ள நிழற்குடையின் கீழ் போதையில் படுத்து இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணியிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி மற்றும் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் கென்னடி குடிபோதையில் இருந்ததோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய கூறுவது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், " பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திலே பள்ளியின் வெளியில் உள்ள நிழற்குடைக்கு வந்து விடுவார். அங்கு சிகிரெட் குடித்து விட்டுப் படுத்து உறங்கி விடுவார். நாங்கள் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை." என்றனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த இரண்டு பள்ளிகளில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களின் பெற்றோரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு , மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தினமும் குடி போதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கூறுவதோடு, பள்ளி நேரத்தில் அங்குள்ள நிழற்குடையின் கீழ் போதையில் படுத்து இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணியிடம் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி மற்றும் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் கென்னடி குடிபோதையில் இருந்ததோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய கூறுவது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், " பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திலே பள்ளியின் வெளியில் உள்ள நிழற்குடைக்கு வந்து விடுவார். அங்கு சிகிரெட் குடித்து விட்டுப் படுத்து உறங்கி விடுவார். நாங்கள் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை." என்றனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த இரண்டு பள்ளிகளில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களின் பெற்றோரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு , மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.