கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - சத்தியமங்கல் சாலையில் உள்ள சரவணம்பட்டி என்ற பகுதியில் காப்பிக்கடை என்னும் இடம் உள்ளது. அங்கு, ஆளுங்கட்சியினர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதே சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவழிச்சாலையை மறித்து அந்தப் பேனர் கட்டப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் ஒருவழிப் பாதையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசின் சார்பில் இருவழிச்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இதுபோன்று சாலைகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - சத்தியமங்கல் சாலையில் உள்ள சரவணம்பட்டி என்ற பகுதியில் காப்பிக்கடை என்னும் இடம் உள்ளது. அங்கு, ஆளுங்கட்சியினர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதே சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவழிச்சாலையை மறித்து அந்தப் பேனர் கட்டப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் ஒருவழிப் பாதையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசின் சார்பில் இருவழிச்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இதுபோன்று சாலைகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.