கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்டது ஓவேலி பேரூராட்சி. இங்குள்ள 18 வார்டுகளில் 48 சிறிய கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் 24,793 பேர் வசித்து வருகின்றனர். இதில் 60 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், 35 சதவிகிதம் பிற வகுப்பினரும், 5 சதவிகிதம் பழங்குடியினரும் வசித்து வரும் இந்தக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பேரூராட்சி செக்ஷன் - 17 நிலத்தில் உள்ளதால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வனத்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, 2006-ம் ஆண்டுக்குப் பின்னர், இப்பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், ‘அடிப்படை வசதிகள் மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் கொடுத்ததால் சாலை, நடைபாதை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

ரூ.4.5 கோடி ஒதுக்கீடு

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், நடைபாதை, தெரு விளக்கு மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான டெண்டர் நேற்று நடந்தது.

இது தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் கூறுகையில், "ஓவேலி பேரூராட்சியில் 2006-ம் ஆண்டுக்குப் பின்னர் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டது. இப்பணிகளுக்கான உத்தரவு, வரும் 16-ம் தேதி வழங்கப்படும். அன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "நடைபாதை, தெரு விளக்கு இல்லாமல் வன விலங்குகள் நடமாட்டத்தால் சிரமப்பட்டு வந்தோம். தற்போது, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றப்பட உள்ளதால், விடிவு பிறந்துள்ளது" என்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...