திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கான குடியிருப்பு வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டி பிளாக்கில் 11- வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை கேஸ் அடுப்பில் ராஜசேகரின் மனைவி சமையல் செய்துகொண்டிருந்த போது அவரது குழந்தை கேஸ் டியூப்பை இழுத்துவிட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ராஜசேகரின் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தீ அணைக்கப்பட்டது.

மாநகர காவலர் குடியிருப்பில் கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கான குடியிருப்பு வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டி பிளாக்கில் 11- வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை கேஸ் அடுப்பில் ராஜசேகரின் மனைவி சமையல் செய்துகொண்டிருந்த போது அவரது குழந்தை கேஸ் டியூப்பை இழுத்துவிட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ராஜசேகரின் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தீ அணைக்கப்பட்டது.

மாநகர காவலர் குடியிருப்பில் கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.