கோவை மாவட்டம் மருதமலை வனபகுதியில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது.
கோவை : கோவை மாவட்டம் மருதமலை வனபகுதியில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது.

கோவை வனச்சரகர் சுரேஷ்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளை பற்றியும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார்.
இயற்கை இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் வன உயிர் உதவி பேராசிரியருமான பண்பு செல்வன் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தனர்.

இந்த தூய்மை பணியில் தன்னார்வத்தோடு கலந்து கொண்ட மாணவர்கள், வனப்பகுதிகளில் குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர்.