சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசு பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கோவை: சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதனை மாநகராட்சி பள்ளிகளில் சில்வர் பேலஸ் உரிமையாளர் எஸ். விக்ராந்த் நேரில் சென்று வழங்கினார். இந்த உபகரணங்கள் அனைத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மானவர்கள் வரை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மாணவர்கள் நன்கு படிக்க ஏற்ற சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விக்ராந்த் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு இது போன்று வழங்க வேண்டும் என்பது எனது குடுப்பத்தாரின் விருப்பம். குடும்பத்தில் மூத்தவர்களான நியல் சந்த் கொஷெர் மற்றும் மகாவீர கொஷெர் ஆகியோர் உதவியுடன் இது வழங்கப்பட்டது. பள்ளி மானவர்கள் தான் நாளைய எதிர்காலம் , அரசாங்கம் என்னதான் சட்டம் இயற்றியானும் அதனை மக்கள் முறையாகப் பின்பற்றினால் தான் நாடு முன்னேறும் அதனை மாணவர்களிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பள்ளி படிப்பில் தேவையான உதவிகளைச் செய்யும் போது அவர்கள் நன்கு படித்து நல்ல மாணவர்களாக உருவாகுவார்கள்," என்றார்.