சிகிச்சைக்கு வந்த சிறுவனை தாக்கியதாக மருத்துவர் மீது போலீஸில் புகார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

குறிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சவேணியின் மகன் சரண். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது மருத்துவர்களால் தாக்கப்பட்டதாகவும், தகாத வார்த்தைகளால் மருத்துவர்கள் பேசியதாகவும் அவரது தாயார் அம்சவேணி பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், மருத்துவமனை உயர்அதிகாரிகளிடம் பேசி தகாத வார்த்தைகளால் பேசிய மருத்துவரை தண்டிப்பதாக கூறி புகார்தாரர் அம்சவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரிடம் சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து சிறுவனின் தாயார் கூறும்போது, நோயாளிகளிடம் இரக்கம் காட்டவேண்டிய மருத்துவர்கள் இதுபோல் நடந்தது ஏற்புடையதல்ல. சிகிச்சைக்காக வந்த என் மகனை தகாத வார்த்தையில் பேசி அடித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தோடு மருத்துவமனை முன்பு தற்கொலை செய்து கொள்வோம். என்றார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...