கோவை: கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணம்நாயக்கனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த மதுக்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிணற்றைத் தூர்வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, கலைந்து சென்றனர். சீரான குடிநீர் வழங்கக் கோரி சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பேருந்துகள் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கண்ணம்நாயக்கனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த மதுக்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிணற்றைத் தூர்வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, கலைந்து சென்றனர். சீரான குடிநீர் வழங்கக் கோரி சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பேருந்துகள் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.