நீலகிரியில் பெய்த சாரல் மழையால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்த லேசான மழையின் காரணமாக ஏற்பட்ட சீதோஷன நிலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த லேசான மழையின் காரணமாக ஏற்பட்ட சீதோஷன நிலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த கால நிலை நிலவி வருகிறது. மேலும், தற்போது, நிலவி வரும் சீதோஷன நிலையால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 152.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகப்படியாகக் குந்தா பகுதியில் 31 மி.மீ. மழையும், குறைந்த பட்சமாக உதகையில் 1 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பதிவான மழையின் அளவு பின்வருமாறு : குன்னூர் 19 மி.மீ. கூடலூர் 1 மி.மீ. குந்தா 31 மி.மீ. கேத்தி 4 மி.மீ. கோத்தகிரி 9.20 மி.மீ. நடுவட்டம் 2 மி.மீ. உதகமண்டலம் 1 மி.மீ., கல்லட்டி 1 மி.மீ., கிளன்மார்கன் 4 மி.மீ., அப்பர் பவானி 6 மி.மீ., எமரால்டு 8 மி.மீ., அவலாஞ்சி 9 மி.மீ., கெத்தை 24 மி.மீ., கின்னக்கொரை 24 மி.மீ., தேவாலா 1 மி.மீ., பர்லியாறு 8 மி.மீ., மொத்த அளவு 152.20 மி.மீ., சராசரி அளவு 8.95 மி.மீட்டராகும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...