திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி சாலையில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீஸார் சிதைந்த நிலையில், இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவரா..? தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து நடந்ததா..? அல்லது கொலையா..? தற்கொலையா..? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி சாலையில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீஸார் சிதைந்த நிலையில், இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவரா..? தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து நடந்ததா..? அல்லது கொலையா..? தற்கொலையா..? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.