யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: யுனெஸ்கோவின் உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் உதகை மலை ரயில் பாதையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் (எண் 37384) இழுவை திறன் குறைந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஞ்சினுக்கு ஓய்வளிக்கப்பட்டு குன்னூர் மலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழமை வாய்ந்த புராதான முக்கியத்துவம் பெற்ற இந்த ரயில் எஞ்சின் பெருமையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்வதோடு, பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையடுத்து, குன்னூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இந்த எஞ்சின் கொதிகலன் சோதனை செய்யப்பட்டு, இழுவை திறன் கண்டறியப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், சோதனை ஓட்டம் திருப்தியாக இருப்பின் ரயில்வே வாரிய ஒப்புதலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம், குன்னூர் மற்றும் உதகை மலை ரயில் பாதையில் நிலக்கரி மூலம் இயக்கப்பட்ட நீராவி எஞ்சின் (எண் 37384) இழுவை திறன் குறைந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த எஞ்சினுக்கு ஓய்வளிக்கப்பட்டு குன்னூர் மலை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உலக புராதான நினைவு சின்ன அங்கீகாரம் கிடைக்க காரணமாக திகழ்ந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக்கப்பட்ட நீராவி எஞ்சினை மீண்டும் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பழமை வாய்ந்த புராதான முக்கியத்துவம் பெற்ற இந்த ரயில் எஞ்சின் பெருமையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்வதோடு, பெருகிவரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையடுத்து, குன்னூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இந்த எஞ்சின் கொதிகலன் சோதனை செய்யப்பட்டு, இழுவை திறன் கண்டறியப்பட்ட பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என்றும், சோதனை ஓட்டம் திருப்தியாக இருப்பின் ரயில்வே வாரிய ஒப்புதலுடன் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.