திருப்பூரில் கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கல்லூரி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருப்பூரிலிருந்து கரூரில் உள்ள சேரன் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பேருந்தை சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் ஒட்டிச் சென்றார். ஒலப்பாளையம் அருகே தஞ்சாவூரிலிருந்து வந்த ஆம்னி காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஜெயராஜ் (34), கடலூரைச் சேர்ந்த ராஜேஷ் (22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

காரில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த மகேந்திரன் (34) படுகாயமடைந்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் காங்கேயம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளகோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...