நச்சுத்தன்மை புகாரால் ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த முடிவு?

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நச்சுத்தன்மை கொண்ட மசூர் பருப்பால், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதன் விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக அரசின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தில் உளுந்தம் பருப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மசூர் என்ற வகை பருப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு மசூர் பருப்பு பயன்படுத்தப்பட்டது. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதன் காரணமாக, தமிழகத்தில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மசூர் பருப்பு கொள்முதலுக்கான டெண்டரை உணவுத்துறை வெளியிட்டு, ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகிக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வகை பருப்பில் அடர் சிவப்பு நிறத்தில் சேர்க்கப்படும் நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், இதனை விநியோகிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, மசூர் பருப்பு கொள்முதலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்த நிலையில் மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது எனவும், பல்வேறு நோய்கள் வரக்கூடும் எனவும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது புகார்கள் வருவதால், ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்தி விட்டு, துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பு வழங்க முடிவு செய்து உள்ளதாக உணவுத்துறை தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...