வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
சின்கோனா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 60-ம் ஆண்டு விழா கொண்டாடுகிறது. அதன்படி, இன்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு விழா, பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர், கலை நிகழச்சியும், 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
பள்ளி வளர்ச்சியில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டு விழா முடிவில் நன்றியுரை கூறி முப்பெரும் விழா நிறைவு பெற்றது.
இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சின்கோனா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 60-ம் ஆண்டு விழா கொண்டாடுகிறது. அதன்படி, இன்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு விழா, பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர், கலை நிகழச்சியும், 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
பள்ளி வளர்ச்சியில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டு விழா முடிவில் நன்றியுரை கூறி முப்பெரும் விழா நிறைவு பெற்றது.
இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.