மதுரை ஆதின விவகாரம்: நீதிமன்ற எச்சரிக்கைக்குப் பணிந்தார் நித்யானந்தா

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார்.

மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கோரி தாக்கல் செய்த மனுவை நித்யானந்தா திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும், தன்னை மதுரை ஆதினமாக அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பும் கோரினார். 

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழையத் தடை விதிக்க வேண்டும் என ஜெகதலபிரதாபன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த 2012ல் மதுரை ஆதீனத்தின் 293வது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டேன். ஒரு முறை ஆதீனமாக நியமிக்கப்பட்டால், அவர் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாக இருப்பார். அந்த நியமனத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த பதில் மனுவில், 293-வது ஆதீனம் என்று குறிப்பிட்டதை திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். ஏனென்றால், 292-வது ஆதீனம் இருக்கும்போதும், 293-வது ஆதீனம் என்று எப்படி குறிப்பிட முடியும்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘பதில் மனுவை தாக்கல் செய்யாமல், இழுத்தடிக்கும் நித்யானந்தாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுவேன்’ என்றும் எச்சரிக்கை செய்தார். மேலும், வருகிற புதன்கிழமைக்குள் நித்யானந்தா சரியான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால், அவரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும்’ எனவும் நீதிபதி கூறினார். 

அப்போது நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர், ‘புதன்கிழமைக்குள் பதில் மனுவை தாக்கல் செய்துவிடுவோம்’ என்று கூறினார். இந்த நிலையில், இன்று மதுரை ஆதினத்தின் 293-வது மடாதிபதி எனக் கூறியதை திரும்பப் பெறுவதாகவும், மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதற்கு மன்னிப்பு கோருவதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...