ஈரானில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்

ஈரானில் நடைபெற்ற ஆசிய அளவிலான உள் அரங்க தடகள போட்டியில் தமிழக மாணவர் வெள்ளி பதக்கம் வென்றார்.


கோவை: ஈரானில் நடைபெற்ற ஆசிய அளவிலான உள் அரங்க தடகள போட்டியில் திருப்பூரை சேர்ந்த தடகள வீரர் வெள்ளி பதக்கம் வென்றார். 



ஆசிய அளவிலான உள் அரங்கத்  தடகள போட்டிகள் ஈரான் நாட்டில் கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி நடைபெற்றது. இதில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி கனகராஜ் என்பவரது மகன் கமல்ராஜ் கலந்து கொண்டு டிரிபிள் ஜம்ப் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கமல்ராஜ்.



அடுத்து இந்தோனேசியாவில் நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த வெற்றி நாயகனைத் தொடர்பு கொண்டு பேசினோம். பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். " சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் அரசு அரசு பள்ளியில் பயின்றேன். நீளம் தாண்டுதல் விளையாட்டில் ஆர்வத்துடன் விளையாடிய போது பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் மோகன் எனக்கு டிரிபிள் ஜம்ப் விளையாட்டை கற்றுக் கொடுத்தார்.



10-ம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற குறுமைய்ய அளவிலான டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன். அந்த முதல் பதக்கமே இவ்விளையாட்டின் மீதான எனது ஆர்வத்தைத் தூண்டியது. தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்.

பின்னர்,கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த எனக்கு 'அச்சீவர் அதலெடிக் அகாடமி' என்ற பயிற்சி மையத்தின் தொடர்பு கிடைத்தது. அங்கு பயிற்சியாளர் முகமது நிசாமுதீன் என்பவரின் கீழ் டிரிபிள் ஜம்ப் விளையாட்டு பயிற்சி பெற்றேன். அதன் மூலமாகவே தற்போது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.



சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்றதால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது. அதனாலேயே தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டேன். இருப்பினும் நாட்டிற்காக வெள்ளி பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. 

வரும் 8- ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறும் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். நாட்டிற்காகச் சர்வதேச அரங்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்" என்று பெருமிதம் தெரிவித்தார். 

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...