ரயில்வே துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கை : சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே தனது ஊழியர்களிடையே நேர்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவும், ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் தனது எந்தஒரு மட்டத்தில் இருக்கும் ஊழியரும் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அது குறித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இத்தகு புகார்களைத் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களையும் ஏற்பாடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில், ரயில்வே ஊழியர்கள் பற்றிய லஞ்ச மற்றும் ஊழல் புகார்களை விஜிலன்ஸ் துறை உதவி எண் 155210 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம்.   

2018 பிப்ரவரி முதல் தேதி துவங்கி தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா. கண்காணிப்பில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில்வே அலுவலகங்கள், பார்சல் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகங்கள், உணவகங்கள், போன்ற இடங்களில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், உதவி ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் எம். சிவதாஸ், உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான சிறப்புப் படையினர் திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி உணவுப் பொருட்கள் விற்ற பலபேர் பிடிபட்டதுடன், அவர்கள் விற்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

ரயில் பயணிகளிடையே இது குறித்து உரையாடிய சேலம் கோட்ட மேலாளர் விஜிலன்ஸ் உதவி தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சேலம் கோட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு ஊழல் மற்றும் லஞ்ச நிகழ்வுகள் பற்றி புகார் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டதுடன், அத்தகு புகார்கள் நிரூபிக்கப்பட்டால், தக்க தண்டனை சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.  இத்தகு சிறப்பு விஜிலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்வுகள் சேலம் கோட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...