ரயில்வே துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கை : சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே தனது ஊழியர்களிடையே நேர்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவும், ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் தனது எந்தஒரு மட்டத்தில் இருக்கும் ஊழியரும் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அது குறித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இத்தகு புகார்களைத் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களையும் ஏற்பாடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில், ரயில்வே ஊழியர்கள் பற்றிய லஞ்ச மற்றும் ஊழல் புகார்களை விஜிலன்ஸ் துறை உதவி எண் 155210 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம்.   

2018 பிப்ரவரி முதல் தேதி துவங்கி தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா. கண்காணிப்பில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில்வே அலுவலகங்கள், பார்சல் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகங்கள், உணவகங்கள், போன்ற இடங்களில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், உதவி ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் எம். சிவதாஸ், உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான சிறப்புப் படையினர் திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி உணவுப் பொருட்கள் விற்ற பலபேர் பிடிபட்டதுடன், அவர்கள் விற்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

ரயில் பயணிகளிடையே இது குறித்து உரையாடிய சேலம் கோட்ட மேலாளர் விஜிலன்ஸ் உதவி தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சேலம் கோட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு ஊழல் மற்றும் லஞ்ச நிகழ்வுகள் பற்றி புகார் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டதுடன், அத்தகு புகார்கள் நிரூபிக்கப்பட்டால், தக்க தண்டனை சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.  இத்தகு சிறப்பு விஜிலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்வுகள் சேலம் கோட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...