மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை: மானிய விலையில் இரு சக்கர வாகனத்தைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி நாளான இன்று கோவையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி துவங்கப்பட உள்ளது.
இதனை, சுய தொழில் செய்யும் பெண்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்ட 18 முதல் 40 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான இன்று மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.
இத்திட்டத்தின் படி இரு சக்கர வாகன பெற தகுதி பெறுபவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகன திட்டம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ம் தேதி துவங்கப்பட உள்ளது.
இதனை, சுய தொழில் செய்யும் பெண்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணி புரிவோர் உள்ளிட்ட 18 முதல் 40 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாளான இன்று மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.
இத்திட்டத்தின் படி இரு சக்கர வாகன பெற தகுதி பெறுபவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகன விலையில் 50 சதவீதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.