திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார்.

இந்த நிலையில், லாரி பொங்கலூர்- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பியுடன் உராய்ந்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், காமநாய்ககன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கம்பி உரசியதால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லாரி பொங்கலூர்- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பியுடன் உராய்ந்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், காமநாய்ககன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கம்பி உரசியதால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.