பல்லடம் அருகே வைக்கோல் தட்டு ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார். 



இந்த நிலையில், லாரி பொங்கலூர்- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பியுடன் உராய்ந்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், காமநாய்ககன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கம்பி உரசியதால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...