நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி கோவையில் இன்று அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீட் தேர்வினால் தமிழக ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அறிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று கோரியும், இந்த தேர்விலிருந்து தமிழக மானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம மற்றும் எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் தேர்வினால் தமிழக ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அறிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வு வேண்டாம் என்று கோரியும், இந்த தேர்விலிருந்து தமிழக மானவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம மற்றும் எஸ்.டி.பி.ஐ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.