திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தனியார் கல்லூரி வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மூத்தூர் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. அங்கு பயின்றுவரும் மாணவர்கள் தினந்தோறும் அக்கல்லூரியின் பேருந்தின் மூலமாக கல்லூரிக்கு செலவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம் போல இன்றும் திருப்பூரிலிருந்து மூத்தூருக்கு கல்லூரி பேருந்தில் மாணவர்கள் சென்றனர். பேருந்தை கருப்பசாமி என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து கூலிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால், பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விபத்தினால் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மூத்தூர் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. அங்கு பயின்றுவரும் மாணவர்கள் தினந்தோறும் அக்கல்லூரியின் பேருந்தின் மூலமாக கல்லூரிக்கு செலவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம் போல இன்றும் திருப்பூரிலிருந்து மூத்தூருக்கு கல்லூரி பேருந்தில் மாணவர்கள் சென்றனர். பேருந்தை கருப்பசாமி என்ற ஓட்டுனர் இயக்கினார். பேருந்து கூலிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனால், பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விபத்தினால் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு படுகாயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.