கோவையில் 100 பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த ஆர்வலர்கள்

கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன.


கோவை: கோவை வனப்பகுதியில் தன்னார்வலர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 100 பட்டாம்பூச்சிகள் தென்பட்டுள்ளன. 



கோவை வனத் துறையினர் மற்றும் 'ஆக்ட் ஆப் பட்டர்பிளை' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டான் பூச்சிகள் போன்ற உயிரினங்களைக் கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. 



கடந்த சனிக்கிழமை கோவை வனக் கோட்டத்தில் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணி நேற்று முடிவடைந்தது. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தன்னார்வலர்கள் பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுத்தல், அவற்றைப் புகைப்படம் எடுத்தல் போன்ற பணிகளைக் மேற்கொண்டனர். 



இது தொடர்பாக, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " கோவையின் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் உள்ளன. 79-ஆக இருந்த தட்டாம்பூச்சி இனங்கள் தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் வனத் துறையில் இருந்து 70 பேரும், பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் 30 பெரும் கலந்து கொண்டனர். 



இதில் பெரிய நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கணக்கெடுத்த குழு 98 வகையான பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்தது" என்றார். 

பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் ஆரஞ்சு அவள்ட், எல்லோ பிரிஸ்டட் பிளாட், நீலகிரி டைகர் போன்ற அறிய வகை பட்டாம்பூச்சிகள் தென்பட்டன. 

அதிக பட்டாம்பூச்சி இனங்களைக் கணக்கெடுத்த மற்றும் புகைப்படம் எடுத்த குழுவினருக்கு கோவை வனக் கல்லூரியில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...