2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.
கோவை: 2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.
தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.