லஞ்ச வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: லஞ்ச வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நேற்று காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை சுமார் 13 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் துணை வேந்தர் கணபதியின் உறவினர் என்று தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் மதிவானணுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நேற்று காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை சுமார் 13 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் துணை வேந்தர் கணபதியின் உறவினர் என்று தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் மதிவானணுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.