திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் அலகுமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற உள்ளது".
இதற்காக தற்போதே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில், அனுபவம் வாய்ந்த மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். காளைகளை முறையாகப் பரிசோதிக்க 18 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் கூறினார்.
திருப்பூர் அலகுமலையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசல் கால்கோல் நடும் விழாவினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு, காங்கேயம், வெள்ளகோவில், தம்மம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற உள்ளது".
இதற்காக தற்போதே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதில், அனுபவம் வாய்ந்த மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். காளைகளை முறையாகப் பரிசோதிக்க 18 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்." என்று அவர் கூறினார்.