திருப்பூரில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துகள்: சிலிண்டர் வெடித்து 8 குடிசைகள் எரிந்து சேதம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே சிலிண்டர் வெடித்ததில் எட்டு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.



ஊத்துக்குளி சாலையிலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் ராமசாமி என்பவர்களுக்கு சொந்தமான எட்டு குடிசை வீடுகள் உள்ளன. இன்று மாலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்கு சென்றிருந்த வேளையில், வீட்டிலிருந்த குழந்தைகள் கியாஸ் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்த வீடுகளில் தீப்பிடித்து அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்துள்ளன. இதனால், எட்டு குடிசை வீடுகளும் முற்றிலும் தீக்கிரையானது.



இதனையடுத்து, தகவலறிந்து மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தின் காரணமாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...