நாளை ரயில் டிக்கெட் கவுண்ட்டர்கள், இணையதளங்கள் செயல்படாது: தெற்கு ரயில்வே

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.,04) 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கணினிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. கணினி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணினியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை ரயில்வே சேவையில் பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நாளை மதியம் 2.05 முதல் 3.45 மணி வரையும், நாளை இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே, ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக்கிங் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட்டு புக்கிங் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணினியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...