ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில், வங்கியில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்த தனி நபர்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் வங்கி கணக்குகளை கண்டுபிடித்து, கணக்கு வைத்துள்ளவர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுவரை ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கடந்த மூன்று மாதங்களில் வரி ஏய்ப்பு, கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் என பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில், வங்கியில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்த தனி நபர்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் வங்கி கணக்குகளை கண்டுபிடித்து, கணக்கு வைத்துள்ளவர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுவரை ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கடந்த மூன்று மாதங்களில் வரி ஏய்ப்பு, கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் என பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.