உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
கோவை : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி ’உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜெம் மருத்துவமனை சிகிச்சை பெற்று குணமாகியவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளிக்கும் முகாமிற்கு, ஜெம் மருத்துவமனை மற்றும் சர்வதேச அளவிலான ரோட்டரி கிளப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி ’உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜெம் மருத்துவமனை சிகிச்சை பெற்று குணமாகியவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளிக்கும் முகாமிற்கு, ஜெம் மருத்துவமனை மற்றும் சர்வதேச அளவிலான ரோட்டரி கிளப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.