கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 68 வயதான அவர் சிறையில் அடைக்கப்பட்டது முதலே மன உலைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சிறை அறையில் உடல் துடைக்கும் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்து தகவலறிந்து சென்று பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், துரைசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகக் கோவை பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 68 வயதான அவர் சிறையில் அடைக்கப்பட்டது முதலே மன உலைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சிறை அறையில் உடல் துடைக்கும் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது குறித்து தகவலறிந்து சென்று பார்த்த சிறைத்துறை அதிகாரிகள், துரைசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகக் கோவை பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.