திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் சி.எம். நகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்குச் சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு புகை வருவதைக் கண்ட தொழிலாளர்கள் உடனடியாக குடோனில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், தனியார் தண்ணீர் லாரிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
குடோனில் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், எவ்வாறு தீ விபத்து நிகழ்ந்தது என பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீவிபத்து ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்து சுமார் 20 நிமிடம் காலதாமதமாக பல்லடம் தீயணைப்பு துறையினர் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் சி.எம். நகரில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்குச் சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு புகை வருவதைக் கண்ட தொழிலாளர்கள் உடனடியாக குடோனில் இருந்து வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், தனியார் தண்ணீர் லாரிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
குடோனில் மின்சார இணைப்பு இல்லாத நிலையில், எவ்வாறு தீ விபத்து நிகழ்ந்தது என பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீவிபத்து ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்து சுமார் 20 நிமிடம் காலதாமதமாக பல்லடம் தீயணைப்பு துறையினர் வந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.