கிராமங்களின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருப்பதாக, மத்திய பட்ஜெட் குறித்து நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்
கிராமங்களின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருப்பதாக, மத்திய பட்ஜெட் குறித்து நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு பாரா முகம் காட்டி உள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம். பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற முடியும். மத்திய அரசின் பார்வை விவசாயிகள், கிராமம் பக்கம் சற்றே திரும்பி இருக்கிறது. போக்குவரத்தின் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தின் மீது மத்திய அரசு பாரா முகம் காட்டி உள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகம். பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற முடியும். மத்திய அரசின் பார்வை விவசாயிகள், கிராமம் பக்கம் சற்றே திரும்பி இருக்கிறது. போக்குவரத்தின் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்வது முதலாளித்துவத்தின் உச்சகட்டம். இவ்வாறு அவர் கூறினார்.