கோவை: பயிர் சேதங்களுக்கு நஷ்ட ஈடு வழங்காமல், விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்து முடித்த இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விவசாயத்திற்கு நிதி இதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " விவசாயத்திற்கு பணம் ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம். விவசாய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. நதிகளை தேசிய மயமாக்காமல் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை.
நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் விவசாயம் செழிக்காது. மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. இந்த பட்ஜெட் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும்." என்றார்.
மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்து முடித்த இந்த பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். விவசாயத்திற்கு நிதி இதுக்குவது என்பது கண்துடைப்பு நாடகம் என்று என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " விவசாயத்திற்கு பணம் ஒதுக்கீடு என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம். விவசாய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. நதிகளை தேசிய மயமாக்காமல் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை.
நீர் நிலைகள் தூர்வாரப்படாமல் விவசாயம் செழிக்காது. மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு வழங்காதது கண்டிக்கத்தக்கது. இந்த பட்ஜெட் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் தரும்." என்றார்.