கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் போல நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 7 பேரை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் போல நடித்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த வடமாநில வாலிபர்கள் 7 பேரை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக மர்ம நபர்கள் சிலர் தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்களிடம், "நாங்கள் மப்டியில் உள்ள போலீஸ். இது மிகவும் மோசமான பகுதி, கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி தாருங்கள் பேப்பரில் மடித்துத் தருகிறோம். வீட்டிற்குச் சென்று அணிந்துகொள்ளுங்கள்" என்று கூறி, நகைகளை வாங்கிய பின்னர் பேப்பரில் மணல் மற்றும் கற்களை வைத்து அவர்களை ஏமாற்றி நகைகளை கொளையடித்து வந்தனர்.
இது தொடர்பாக மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பல நாட்களாக இந்த கும்பல் 'டிமிக்கி' கொடுத்து வந்த இந்தக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ரமேஷ்குமார் (42) என்பவர் நேற்று மதியம் வெரைட்டி ஹால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
இது தொடர்பாக, ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் இன்று காலை உக்கடம் - பேரூர் பைபாஸ் சாலையில் வாகனத்தநிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், மும்பையைச் சேர்ந்த யாசர் அலி (47), தகி அலி (43), பைரோஸ் அலி சையது (36), ஷாகித் அலி (28), சபீர் அலி (32), அஸ்லாம் (6௦), ராகேஷ் (27) ஆகியோர் என்பதும் கோவையில் 8 கொள்ளை வழக்குகளிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 கொள்ளை வழக்குகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 போரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடந்த சில மாதங்களாக வடமாநில வாலிபர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. போலீசார் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்வதும், வடமாநில வாலிபர்கள் குறித்த் தகவல்களை முழுமையாக சேகரிப்பதும் கட்டாயமாகியுள்ளது.
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக மர்ம நபர்கள் சிலர் தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்களிடம், "நாங்கள் மப்டியில் உள்ள போலீஸ். இது மிகவும் மோசமான பகுதி, கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி தாருங்கள் பேப்பரில் மடித்துத் தருகிறோம். வீட்டிற்குச் சென்று அணிந்துகொள்ளுங்கள்" என்று கூறி, நகைகளை வாங்கிய பின்னர் பேப்பரில் மணல் மற்றும் கற்களை வைத்து அவர்களை ஏமாற்றி நகைகளை கொளையடித்து வந்தனர்.
இது தொடர்பாக மாநகர காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. பல நாட்களாக இந்த கும்பல் 'டிமிக்கி' கொடுத்து வந்த இந்தக் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ரமேஷ்குமார் (42) என்பவர் நேற்று மதியம் வெரைட்டி ஹால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.
இது தொடர்பாக, ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 11 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் இன்று காலை உக்கடம் - பேரூர் பைபாஸ் சாலையில் வாகனத்தநிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், மும்பையைச் சேர்ந்த யாசர் அலி (47), தகி அலி (43), பைரோஸ் அலி சையது (36), ஷாகித் அலி (28), சபீர் அலி (32), அஸ்லாம் (6௦), ராகேஷ் (27) ஆகியோர் என்பதும் கோவையில் 8 கொள்ளை வழக்குகளிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 கொள்ளை வழக்குகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 போரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடந்த சில மாதங்களாக வடமாநில வாலிபர்கள் தமிழகத்திற்குள் நுழைந்து கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. போலீசார் முறையாக ரோந்து பணிகளை மேற்கொள்வதும், வடமாநில வாலிபர்கள் குறித்த் தகவல்களை முழுமையாக சேகரிப்பதும் கட்டாயமாகியுள்ளது.