நீலகிரியில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு

​150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


நீலகிரி, ஜனவரி 31

​150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தொரை பாலா டாவில்  ரேடியோ வானிலை மையம் அமைந்துள்ளது. இங்கு வானியல் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும்,வான்வெளியில் நடக்கும் அதிசயங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.



இந்நிலையில், 150 ஆண்டுகள் பிறகு இன்று முழு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. புளூ மூன் என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாக இன்று நடைபெறவுள்ளது. இத்தகைய அரிய நிகழ்வு ஆசிய கண்டத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். மாலை 6 மணி முதல் 7.37 வரை நிகழ உள்ள இந்த சந்திர கிரகணத்தை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில், உதகை ரேடியோ வானிலை மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதி நவீன ஆப்டிக்கல் டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிரகணத்தை விளக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...