150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நீலகிரி, ஜனவரி 31
150 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சந்திர கிரகணம் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தொரை பாலா டாவில் ரேடியோ வானிலை மையம் அமைந்துள்ளது. இங்கு வானியல் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும்,வான்வெளியில் நடக்கும் அதிசயங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், 150 ஆண்டுகள் பிறகு இன்று முழு சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. புளூ மூன் என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாக இன்று நடைபெறவுள்ளது. இத்தகைய அரிய நிகழ்வு ஆசிய கண்டத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம். மாலை 6 மணி முதல் 7.37 வரை நிகழ உள்ள இந்த சந்திர கிரகணத்தை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில், உதகை ரேடியோ வானிலை மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதி நவீன ஆப்டிக்கல் டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிரகணத்தை விளக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது