உலக பாக்ஸ் ஆபிசில் ரூ. 200 கோடி வசூல் வேட்கையில் ’பத்மாவத்’

உலக பாக்ஸ் ஆபீசில் பத்மாவத் திரைப்படம் இந்த வார இறுதியில் ரூ. 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜனவரி 31

உலக பாக்ஸ் ஆபீசில் பத்மாவத் திரைப்படம் இந்த வார இறுதியில் ரூ. 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகியது. தற்போது, இந்தப் படம் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் உலக அளவில் இதன் மொத்த வசூல் ரூ.162 கோடியை தாண்டி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் பத்மாவத் ரூ. 200 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இதுபோன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது.

படத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் கிடைத்திருக்கும் வெற்றி பெரிய விஷயம். இந்தப் படத்தை என் பெற்றோருக்கு பெங்களூரில் பிரத்யேகமாக திரையிட்டோம். அவர்கள் என் நடிப்பைப் பார்த்து மெய்மறந்தார்கள். மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இருந்தாலும் சினிமாவில் எதுவும் நடக்கலாம். என்னை பாதிக்கும் வரலாற்றுக் கதைகள் வந்தால் அதில் நடிப்பது பற்றி யோசிப்பேன், என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...