சகோதரனின் கொலைக்கு நீதி கோரி 783 நாட்கள் நடத்திய இளைஞரின் உண்ணாவிரதம் வாபஸ்

சகோதரனின் கொலைக்கு நீதி கோரி 783 நாட்கள் நடத்திய இளைஞரின் உண்ணாவிரதம் வாபஸ்

ஜனவரி 31

கேரளாவில் தனது சகோதரர் சாவுக்கு நீதி கேட்டு, 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இளைஞர் வாபஸ் பெற்றார். 

அம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பாரசலா போலீஸ் நிலையத்தில், விசாரணைக் கைதியாக இருந்த ஸ்ரீஜீவ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். எனினும், இதனை ஏற்க மறுத்த ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித் தனது சகோதரன் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதற்கான நீதி கேட்டு, கடந்த 2016 ஜனவரி 30ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். கேரள தலைமைச் செயலகம் முன்பாக, இந்தப் போராட்டத்தை தொடர்ந்த அவரிடம் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த நிலையில், பூஞ்சர் தொகுதி எம்.எல்.ஏ. ஜார்ஜ், ஸ்ரீஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும், உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும் அவர் வலியுறுத்தினார். எனினும், சம்பந்தப்பட்ட போலீசார் தண்டிக்கப்படும் வரையிலும் போராட்டத்தைக் கைவிட மாட்டேன் என ஸ்ரீஜித் கூறினார். 

தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சகோதரரின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டத்தைத் தொடர்ந்த ஸ்ரீஜித்துக்கு, கேரள மக்களும் ஆதரவு அளித்தனர். சமூக வலைதளங்களிலும் ஸ்ரீஜிவ்வின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும், மலையாள முன்னணி நடிகர்கள் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பார்வதி, பிருதிவிராஜ் உள்ளிட்ட பலரும் ஸ்ரீஜித்தின் போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே, ஸ்ரீஜிவ்வின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனடிப்படையில், ஸ்ரீஜிவ்வின் மரணம் தொடர்பான வழக்கு சி.பி.ஐ. விசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 783 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஸ்ரீஜித் கைவிடுவதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சகோதரனின் மரணம் தொடர்பான வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ. வழக்கை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

463 நாட்களுக்கும் மேலாக, ஒருவர் நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்தும், உரிய நீதி கிடைக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளதென்று, கேரள மக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...