தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனிபட்ஜெட் தேவை : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை : தண்ணீர், பயிர், விவசாயம் ஆகியவற்றிற்கு தனித்தனிப் பட்ஜெட் கொண்டுவருவதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 



இது தொடர்பாக கோவையில் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேசுகையில்,

மானியம், இலவசம், கடன், கடன் தள்ளுபடி, காப்பீடு, நிவாரணம் போன்றவற்றால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க முடியாது. ஊதிய கமிட்டி பரிந்துரையை அரசு நடைமுறைப்படுத்துவது போன்று விவசாயக் கமிட்டியின் பரிந்துரையையும் ஏற்று அரசு செயல்படுத்தினால் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத்தலைவர் கூறியது போன்று விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியும். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சந்திக்க இருப்பது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். காவிரி நீருக்காக தமிழகம் யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் போன்று நாள்தோறும் நதிநீர் பங்கீடு என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திருத்தி அமைக்க வேண்டும். நாட்டின் 58 சதவிகிதம் விவசாயத் தொழில் இருக்கும் நிலையில், பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்வது என்பது விவசாய விரோதப்போக்கு. 



சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழில்களுக்கு சிவப்பு கம்பள விரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து உணவுமுறை மாற்றம், பயிர்முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், பருவநிலை மாற்றம், மக்கள் தொகைக்கு ஏற்ப இவற்றிற்கு தீர்வுகாணும் வகையில் விவசாயத்தை மேம்படுத்தும் திட்ட அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பான 5 தொகுதிகளை (VOLUME) நடிகர் ரஜினி படித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் என்றும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு கேடு என தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்தார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...