கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் தேரோட்டத் திருவிழா

கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவை : கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் இருக்கும் ஐம்பொன் சிலையை தேரில் வைக்கப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கோட்டை மேடு ஆகிய பகுதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோவில் முன்பாக உள்ள தேர்நிலையை அடைந்தது.

இதில், நூற்றுக்கணக்காக ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரோட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு காலை நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...