கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை : கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் இருக்கும் ஐம்பொன் சிலையை தேரில் வைக்கப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கோட்டை மேடு ஆகிய பகுதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோவில் முன்பாக உள்ள தேர்நிலையை அடைந்தது.
இதில், நூற்றுக்கணக்காக ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரோட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு காலை நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம், கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் இருக்கும் ஐம்பொன் சிலையை தேரில் வைக்கப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கோட்டை மேடு ஆகிய பகுதிகளின் வழியாகச் சென்று மீண்டும் கோவில் முன்பாக உள்ள தேர்நிலையை அடைந்தது.
இதில், நூற்றுக்கணக்காக ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரோட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு காலை நேரத்தில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.