தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து இன்று கோவையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து இன்று கோவையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மாவட்டம், உக்கடத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.எ.அப்துல் ரஹ்மான் தலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு பேருந்து கழகத்தை நஷ்டத்தில் ஆழ்த்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மீத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பேருந்துகளை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில், துணைத் தலைவர்கள் ஆர்.ஜே.ரெஜினா, எம்.எஸ்.ஷபீர் அலி, மாநில நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் இ.எம்.எஸ்.இப்ராஹிம், எஸ்.எம்.ஷாஜஷான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று கோவை மாவட்டம், உக்கடத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.எ.அப்துல் ரஹ்மான் தலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு பேருந்து கழகத்தை நஷ்டத்தில் ஆழ்த்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மீத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பேருந்துகளை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில், துணைத் தலைவர்கள் ஆர்.ஜே.ரெஜினா, எம்.எஸ்.ஷபீர் அலி, மாநில நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் இ.எம்.எஸ்.இப்ராஹிம், எஸ்.எம்.ஷாஜஷான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
