திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த சுருதி உள்ளிட்ட 4 பேர் இன்று மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த பண மோசடி புகாரில் நடிகை சுருதி, சித்ரா, பிரசன்ன சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக போலீசார் சுருதி வீட்டுக்குச் சென்றபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் குடும்பத்தினர் தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று 4 பேர் மீதும் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, இவர்களை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுருதி உள்ளிட்ட 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த பண மோசடி புகாரில் நடிகை சுருதி, சித்ரா, பிரசன்ன சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக போலீசார் சுருதி வீட்டுக்குச் சென்றபோது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் குடும்பத்தினர் தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று 4 பேர் மீதும் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, இவர்களை வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுருதி உள்ளிட்ட 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.