வால்பாறை கருமலை எஸ்டேட்டில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.


வால்பாறை: வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வால்பாறை அடுத்துள்ள தேயிலை எஸ்டேட் பகுதி மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் வன விலங்குகளுக்கான வாழ்விடம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், வனப்பகுதிகளை ஆக்கிரமித்தும் ஆங்காங்கே விடுதிகள் கட்டப்பட்டு வருவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வன விலங்குகள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த சீதாலட்சுமி (62) என்னும் மூதாட்டியை அங்கு வந்த காட்டெருமை தாக்கியுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த சீதாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கருமலை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.



அங்கு சீதாலட்சுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வால்பாறை வனத்துறை மற்றும் வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக, இதே கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுச்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காட்டெருமை தாக்கி சீதாலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளது கருமலை எஸ்டேட் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...