தொட்டபெட்டா சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள தொட்டபெட்டா சாலையினை சீரமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நீலகிரி:

பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள தொட்டபெட்டா சாலையினை சீரமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நீலகிரி அதிகப்படியான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய மலை மாவட்டமாகும். தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தோட்டங்கள், பூங்காக்கள், காட்சி முனைகளைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தொட்டபெட்டா மலைச் சிகரம் உதகையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உதகையிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொட்டபெட்டா சிகரத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், தொட்டபெட்டா பிரிவு பகுதியிலிருந்து மலை உச்சிக்குச் செல்லும் 3 கிலோ மீட்டர் சாலை மோசமான நிலையில் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கையின் காரணமாகக் கடந்தாண்டு 3 மாத காலம் தொட்டபெட்டா செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சாலை செப்பனிட்ட ஒரு வருடத்திற்குள் மீண்டும் சாலை பழுதடைந்து பழைய நிலையில் உள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



மேலும், இந்த சாலை சீரமைப்பதற்காகச் சோதனை சாவடியில் இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 10, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.30, மற்றும் பெரிய வாகனங்களுக்கு ரூ.50 என வசூலிக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போதிலும் போதிய பராமரிப்பின்றி சாலை இருப்பது சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



சுற்றுலாவின் மூலம் பெரிய அளவிலான வருவாயை ஈட்டித்தரக்கூடிய தொட்டபெட்டாவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...