அமைச்சர்களின் இலாபத்திற்காகவே பேருந்து கட்டணம் உயர்வு : ஆதாரம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பேட்டி

ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை வடவள்ளி அருகே டிடிவி தினகரனின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு மட்டுமே. போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறையே தவிர வருமானம் அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற்று இருப்பார்கள். போக்குவரத்தில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். 

 

சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பேருந்து கட்டண உயர்வு என்பது உண்மைதான். இது குறித்து எங்களிடமே பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

 

பிப்ரவரி இறுதிக்குள் "கூவத்தூர் பழனிச்சாமி" அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க.,விலிருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற அ.தி.மு.க., சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான். என்றார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...