தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
நீலகிரி, ஜனவரி 29
தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளையோ அல்லது அடுத்த மாதமோ எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஒவ்வொரு அமைச்சரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு திட்டங்கள் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால், நீட் தேர்வில் நமது உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம்.
கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற பிரச்சனைகளில் தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டோம். காவிரி பிரச்சனையில் நமது உரிமையைப் பெற முடியாத சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிமுக அமைச்சர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகும்.
போக்குவரத்து பேருந்துகளின் அவல நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஒரு இயக்கம் என்பது புதிய பேருந்துகளை வாங்கி இயக்குவது அல்லது பழைய பேருந்துகளைப் பராமரிப்பதாக உள்ளது. தமிழக அரசு முதலமைச்சர் கப்டுப்பாட்டில் இல்லை. அதேப் போல தான் போக்குவரத்துக் கழகமும் கட்டுப்பாட்டினை இழந்து செயல்பட்டு வருகிறது.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 31-ம் தேதியன்று கூடலூரில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசு முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், போக்குவரத்துத் துறையும் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வருகிறது என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளையோ அல்லது அடுத்த மாதமோ எப்பொழுது வேண்டுமானாலும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஒவ்வொரு அமைச்சரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்திற்கு திட்டங்கள் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால், நீட் தேர்வில் நமது உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம்.
கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற பிரச்சனைகளில் தங்களது உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டோம். காவிரி பிரச்சனையில் நமது உரிமையைப் பெற முடியாத சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிமுக அமைச்சர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகும்.
போக்குவரத்து பேருந்துகளின் அவல நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஒரு இயக்கம் என்பது புதிய பேருந்துகளை வாங்கி இயக்குவது அல்லது பழைய பேருந்துகளைப் பராமரிப்பதாக உள்ளது. தமிழக அரசு முதலமைச்சர் கப்டுப்பாட்டில் இல்லை. அதேப் போல தான் போக்குவரத்துக் கழகமும் கட்டுப்பாட்டினை இழந்து செயல்பட்டு வருகிறது.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்வரும் 31-ம் தேதியன்று கூடலூரில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.